Tuesday 10 June 2014

டுவிட்டர் @newsigaram - 03

#இடம் வாங்கி வீடு கட்டுபவர்களை விட, கடன் வாங்கி வீடு கட்டுபவர்களே அதிகம்.

#வார இறுதியில் சரியாக ஓய்வெடுக்காதவன், வார நாட்களின் காலையில் சுறுசுறுப்பாக எழுந்ததாக வரலாறே இல்லை.


#"இவ்வளவு குறைவா மார்க் வாங்கியிருக்கே ... இனி என்னை அப்பானு கூப்புடாதடா" "அப்பா அது கிளாஸ் டெஸ்ட் தான் டிஎன்ஏ டெஸ்ட் இல்ல"

#எது நடந்ததோ அது உன் மன பலத்தால் மட்டுமே நடந்தது. !

#பகிரப்படாத பிரியங்களில்தான் இவ்வாழ்க்கை கடந்து போகிறது.

#இன்றைய பிரச்சனைகளுக்கு நேற்றைய பதில்களை அளிப்பதுதான் அரசியல் -மார்ஷல் மக்லூகன்.

 Embedded image permalink

#துன்பமற்ற பகலும், இன்பமுள்ள இரவுமே உங்கள் உண்மையான விடுதலை -கலீல் ஜிப்ரான்

#இறங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீர்கள் அப்படித்தான் நற்பெயர் பெற்றது மழையும் ..!

#சாரலாகத்தான் தொடங்கியது அவள் குடை விரித்த கோபத்தில் கொட்டித்தீர்த்தது மழை

#குழந்தைகள் நோய்வாய்ப்படாமலிருந்தால் துணிகள் காய்ந்துவிட்டால் வீடு சேறாகாமல் இருந்தால் நானும் கூட ஒரு மழை கவிதை 
எழுதிவிடுவேன் # மழை கவிதை.

6 comments:

  1. டுவீட்டுகள் அனைத்து அருமை. குறிப்பாக மார்க் பற்றிய டுவீட் ஒரு பஞ்ச்

    ReplyDelete
  2. வணக்கம்

    நல்ல தகவலை எடுத்துரைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    என்பக்கம் கவிதையாக

    சிறகடிக்கும் நினைவலைகள்-3.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன். நிச்சயம் வருகிறேன்.

      Delete
  3. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete