முன்னாள் தமிழக முதல்வரும் இலக்கிய வாதியுமான கலைஞர் கருணாநிதி 2018.08.07 அன்று மாலை காலமானார். இவருக்கு இலங்கை அரசியல் வாதிகள் தங்கள் கட்சி சார்பிலும் இலங்கை அரசு சார்பிலும் தங்கள் அஞ்சலியை நேரில் செலுத்தினர்.
மனோ கணேசன், ராதாகிருஷ்ணன், திலகராஜ், வடிவேல் சுரேஷ் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்தினர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆறுமுகன் தொண்டமான், எம். ராமேஸ்வரன், செந்தில் தொண்டமான், பி. இராஜதுரை ஆகியோர் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்தினர்.
#கருணாநிதி #தமிழகம் #இலங்கை #அஞ்சலி #திமுக #தமிழ்_முற்போக்கு_கூட்டணி #இலங்கை_தொழிலாளர்_காங்கிரஸ்