Sunday 8 June 2014

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01




"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"
"நீ இல்லாம எப்படி ஜெய்?"
"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."
"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?"
"..................................."
"சரி விடு. நா பாத்துக்குறேன்...."
"பரவாயில்லப்பா.. நானும் வாறேன்..."
"சரி ஜெய்"

தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதை என்னவோ பண்ணியது.

"ஜெய்..." - நண்பன் சுசியின் அழைப்புக் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது. பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து 'என்ன' என்பது போல அவன் முகத்தைப் பார்த்தேன்.

"வாழ்த்துக்கள்டா மாப்ள..."
"என்ன சுசி நீயும்.....?"
"சரிடா.. நா கிண்டல் பண்ணல. இதுக்கு நீயா தானே ஒத்துக்கிட்ட? அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு...?" "ம்....... நா எதுக்கு........" "எதுக்கு, எப்படின்னெல்லாம் பேசி இப்ப ஆகப்  போறது ஒண்ணுமில்ல. அடுத்த கட்டத்துக்கு தயாராகு ஜே.கே." "சரிடா." "சரி. நீ .கிளம்பு. வேலைய நா முடிச்சுக்கிறேன்." பதிலுக்கு தலையை மட்டும்  ஆட்டிவிட்டு அரை மனதுடன் என் இல்லம் நோக்கி விரைந்தேன் என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்காக..... 

                                                            ********
"கல்யாண வைபோகம்" குறு வலை நாவலை ""சிகரம்" வலைத்தளத்தில் வாசிக்க: 
"சிகரம் - கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் -01

இது நமது பிரதான வலைத்தளமான "சிகரம்" தளத்தில் என்னால் எழுதப்பட்ட கதைத் தொடராகும். ஆயினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் கதையை இடைநிறுத்த வேண்டியதாயிற்று. இப்போது மீண்டும் தொடர காலம் கனிந்துள்ளது. இத்தருணத்தில் இதற்கு முன் வெளியான 09 அத்தியாயங்களையும் மீள வெளியிடுவதே பொருத்தமான நடவடிக்கையாக அமையும் என்பதால் இத்தளத்தில் வெளியிடுகிறேன். 3 நாட்களுக்கு ஒரு அத்தியாயம் என்ற அடிப்படையில் வெளியாகும். ஜூலை 01 ஆம் திகதி 09 ஆம் அத்தியாயம் வெளியாகும். அதன் பின் ஜூலை - 05 முதல் வாரத்திற்கு ஒரு அத்தியாயம் என்ற அடிப்படையில் கதைத் தொடரினை புதிய அத்தியாயமான 10 ஆம் அத்தியாயத்திலிருந்து நீங்கள் தொடரலாம்.

வாருங்கள், "கல்யாண வைபோகத்தினை" இனிதே நடத்திட கைகோர்ப்போம்!

7 comments:

  1. முதல் பாகங்களை விரைந்து வாசித்த பின் கருத்துடன் இணைகின்றேன் சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உள்ளமே!

      Delete
  2. வணக்கம்

    தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்

    த.ம +2 வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ungal aarambam migavum arumai aduththu enna?
    melum ungal pani thodara vazhthukkal

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள்.வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete