Thursday 19 June 2014

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05

 
 

பகுதி - 03

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 


பகுதி - 04

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04

 

பகுதி - 05

நந்தினியின் மணமகள் தோழியாக வந்தது திவ்யாதான் என்பதைச் சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்து மௌனமானான் சுசி. நான் தொடர்ந்து பேசலானேன்.

"அது மட்டுமில்ல. நாங்க வெளில வர்றப்ப கதவுல சாஞ்சி நின்னுக்கிட்டு அவ பார்த்த பார்வ என்னை இன்னமும் என்னமோ பண்ணுதுடா. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கணும் சுசி."

"அது எப்படிடா முடியும்?" சுசி தன் மௌனத்தைக் கலைத்து பேச ஆரம்பித்தான்.

"அவ என்னை நாளைக்கு எங்க வழமையான இடத்துல சந்திக்க வரச் சொல்லி மெசேஜ் அனுப்பியிருக்கா....


"திவ்யாவா இது?" தன் புருவங்களை உயர்த்தி ஆச்சரியமாகக் கேட்டான்.

"ம்...... அதான்டா எனக்கும் ஒன்னும் புரியல."

"அன்னிக்கு பிரிஞ்சிருவோம்னு முடிவெடுத்ததும் அவதான். இன்னிக்கு பேசணும்னு சொல்லிருக்கதும் அவதான்."

சுசி இப்படிச் சொன்னதும் திவ்யாவுடனான கடைசிச் சந்திப்பு மனதில் வந்து நிழலாடியதனால் விழியோரமாய் கண்ணீர் வந்து சற்று எட்டிப் பார்த்தது. சிரமப்பட்டு கண்ணீரை அடக்கிக் கொண்டேன். என் நிலை கண்டு எதுவும் கூற முடியாமல் சிறிது மௌனம் காத்தான் சுசி.

சில நிமிட இடைவெளிகளின் பின் "ஒன்ணும் யோசிக்காத. நடக்குறத அது பாட்டுல விடு. நாளைக்கு காலைல கிளம்பத் தயாராயிரு. ஜீவாவோட காரை எடுத்துக்கிட்டு வாறேன். நாம போகலாம். சரியா?" என்று கேட்டான் சுசி.

'சரிடா' என்பதாக தலையை மட்டும் ஆட்டினேன். பேசினால் எங்கே அழுதுவிடுவேனோ என்று பயமாய் இருந்தது. சூழ்நிலையைப் புரிந்து கொண்ட சுசி "வர்றேண்டா" என்று என் தோளைத் தொட்டு சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் கிளம்பிச் சென்றான்.

அவன் கிளம்பிச் சென்ற பின் திவ்யாவின் யோசனைகளில் மூழ்கியிருந்த என்னை யாரோ அழைப்பது போலிருந்தது. கீழ்த்தளத்திலிருந்து அம்மாதான் என்னை அழைத்தார்.

"ஜெய்... எங்கப்பா இருக்க....?"
"இதோ வர்றேம்மா......" என்று குரல் கொடுத்தவாறே சென்றேன்.
"இந்த டீய கொஞ்சம் குடிச்சிட்டுப் போப்பா...." என்றவாறே அம்மா என் கைகளில் தந்த தேநீரை எடுத்துக் கொண்டு எனதறைக்குள் சென்று பருக ஆரம்பித்தேன். அம்மாவின் தேநீர் ஒரு புது உற்சாகத்தை வழங்கியது போலிருந்தது. சற்றே சிந்தனைகளில் இருந்து விடுபட்டவனாய் காணப்பட்டேன். அப்போது 'மனம் கொத்திப் பறவை' திரைப்படத்தின் 'போ... போ... நீ எங்க வேணா போ...' என்ற பாடலை என் கைப்பேசி பாட ஆரம்பித்தது. ஒரு புதிய இலக்கம். தேநீர்க் கோப்பையை மேசை மேல் வைத்துவிட்டு யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன் பதிலளித்தேன்.


"ஹலோ.."
மறுமுனையில் "ஹலோ.." என்றது ஒரு இனிய பெண் குரல். பரிச்சயமில்லை என்று தீர்ப்பளித்தது மனம்.
"நீங்க.....?"
"நந்தினி"
"நந்தினியா?"
"என்ன பகல் தான் வந்து பார்த்துட்டு போனீங்க.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?"
"ஒ... நீங்களா?"
"ஏன் எடுக்கக் கூடாதா ?"
"அதுக்கில்ல.... என் நம்பர்...... எப்படி...?"
"அதுவா? உங்க ப்ரண்டு தந்தாங்க."
"ப்ரெண்டா ? யாரது?"
"என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க? திவ்யா உங்க ப்ரெண்டு இல்லையா?"

நந்தினி இப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் எதுவும் சொல்லவில்லை.

"...................................."
"ஹலோ..."

சற்று சுதாகரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.

"ம்.... திவ்யா தான் கொடுத்தாங்களா?"
"ஆமா"
"உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?" தயங்கியவாறே கேட்டேன்.
"கேளுங்க"
"திவ்யாவ உங்களுக்கு எப்படி தெரியும்?"
"இத கேக்க ஏன் தயங்குறீங்க? திவ்யா என் அக்கா."
"அக்காவா?" சற்றே அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டேன்.
"ஏன்? இருக்கக் கூடாதா ?"
"திவ்யாவுக்கு  அப்படி யாரும் இல்லையே......."
"நா என்ன பொய்யா சொல்றேன்?"
"ஆமா. நிச்சயமா அப்படி யாரும் இல்ல."
"சரி.... சரி..... கோவப்படாதீங்க.... திவ்யா என் அத்தைப் பொண்ணு. போதுமா?"

நான் பேசவில்லை. இப்போது என் மனதுக்குள் இருந்த குழப்பம் அதிகமாகியிருந்தது. திவ்யா ஏன் இவளுக்கு என் தொலைபேசி இலக்கத்தைக் கொடுக்க வேண்டும்? திவ்யாதான் கொடுத்தாளா? நந்தினி சொல்வது போல திவ்யா உறவுக்காரியாக இருக்க வாய்ப்பில்லை என்றே என் மனம் யூகித்தது. அவளிடமிருந்து ,மேலதிகமாக ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று அறிந்து கொள்ளும் நோக்குடன் தொடர்ந்து பேச ஆரம்பித்தேன்.......

 

**********
"கல்யாண வைபோகம்" தொடரினை "சிகரம்" வலைத்தளத்தில் தொடர...

பகுதி - 01

பகுதி - 02

 
 
"கல்யாண வைபோகத்தினை" இனிதே நடத்திட கைகோர்த்திடுங்கள் .

-இரு வீட்டார் அழைப்பு-

No comments:

Post a Comment